ஞாயிறு, செப்டம்பர் 21, 2003

மெல்லிசை பாசுரங்கள்

திவ்ய பிரபந்தங்களை உணர்ந்து படிக்க ஆரம்பித்தபிறகு அவற்றை வாய்விட்டுப் பாட வேண்டும் என்றும் ஆசை ஏற்பட்டது. (SPB இடமிருந்து பாடம் படித்தும், ஆசை விடவில்லை) இணையத்தில் ஒலிவடிவத்திலும் கிடைத்தது. ஆனால் அவை மந்திர பாராயணம் போல் இருந்ததே அன்றி மனதில் பச்சென்று ஒட்டிக்கொள்ளும்படியாய் இல்லை. அப்போது உன்னிகிருஷ்ணன் பாடிய 'பச்சை மாமலை போல் மேனி' musicindiaonline இணைய தளத்தில் கிடைத்தது. என்னமாய் இழைந்து பாடியுருக்கிறார் மனுஷன்! ம்.. நம்மால் கூடப்பாடுவது கூட கடினமாயிருக்கிறது. (தமிழ் உச்சரிப்பில் சிறு பிணக்குத் தெரிகிறது, மன்னிப்போம், உதாரணமாய் 'கமலச்செங்கண்' 'கமலச்செங்கன்' ஆகிவிட்டது)

பிறகு இரு மாணிக்கங்கள் templenet இணையத்தில் கிடைத்தன. அவை 'அமலன் ஆதி பிரான்' மற்றும் 'பாயும் நீர் அரங்கம் தன்னுள்'. இவை பிரபலமான பாடகர் யாரும் பாடினதில்லை. அந்த இணையதள உரிமையாளர் திரு K. கன்னிகேஸ்வரன் பாடியிருக்கிறார். ஆனால் மிக அருமையாக இருக்கின்றன. கேட்டுப்பாருங்கள். இப்பொழுது எங்கள் வீட்டு சுப்ரபாதம் இந்த மூன்று பாடல்கள் தான்.

இன்னும் இசையுடன் பாடப்பட்ட பாசுரங்கள் எங்காவது இணையத்தில் கிடைத்தால், தெரிந்தவர்கள் சுட்டினால், ரொம்ப மகிழ்வேன்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...