வியாழன், அக்டோபர் 16, 2003

இன்விடேஷன் ஃப்ரம் டமில் சங்கம்

அன்பு நண்பர் பரிமேழலகர் (ரெண்டு விரல்ல டைப் அடிக்கற எனக்கு உங்க பேரை அடிக்கறதுக்குள்ள விரல் சுளுக்கிக்கும் போல இருக்கு :), இங்கு நடத்தப்படும் தமிழ்சங்கங்களின் வாழ்நாள் முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோர் இருக்கும் வரைதான் போல என்று வேதனைப்பட்டிருந்தார். அதுவரைக்கும்கூட தாங்குமா என்று தெரியவில்லை.

எங்க ஊர் டமில் சங்கத்தில் தீபாவளி விழாவுக்கு அமைப்பாளராக இருக்கும் ஒரு குடும்பத்துப் பெண்மணி என் மனைவியிடம் இங்லீஷில் பேசி அழைக்க, தமிழ்ச் சங்கம் தானே தமிழிலேயே பேசலாமே என்று என் மனைவி சொல்லப்போக, இப்போது இருவரும் TV சீரியலில் வரும் மாமியார்-மருமகள் அல்லது நாத்தனார் அளவுக்கு வாய்ச்சண்டை போடும்படி யாகி விட்டது. ஒரு சாதாரண விஷயம் பெரிசுபடுத்தப்பட்டு விட்டது வேறுபுறம். என் கவலை எல்லாம், தமிழ்ச்சங்கத்துக்கு தமிழில் அழைக்கலாமே என்று சொன்னதே குற்றமாகிவிட்டதே என்பதுதான். பரி, கவலையே வேண்டாம், அடுத்த தலைமுறைக்கெல்லாம் தமிழ்ச்சங்கம் இருக்காது. சண்டைகளும் இருக்காதென்றெல்லாம் நான் உத்தரவாதம் தரமுடியாது :-)

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...