புதன், அக்டோபர் 29, 2003

Update on கிடாவெட்டு

கிடாவெட்டு தடைச்சட்டத்தை எதிர்த்து ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக்கில் எழுதியிருப்பதை எடுத்துக்காட்டி, பத்ரி தனக்கு அந்தக் கருத்துக்களுடன் முழு உடன்பாடு உண்டு என்றும் எழுதியிருக்கிறார். பகவத் கீதையையும், கண்ணப்ப நாயனாரையும் குறிப்பிட்டு ஏற்கனவே இந்த வலைப்பூவில் எழுதியிருந்தேன். எனக்கும் நிறைய விஷயங்களில் குருமூர்த்தி அவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டென்றாலும், இந்த விஷயத்தில் சிந்தனை ஒரே மாதிரி ஓடுகிறது. Great men think alike என்பதனால் அல்ல, இது நம் சமூக வரலாறை, மக்கள் எண்ணங்களை அறிந்த எவரும் எடுக்கக்கூடிய நிலைப்பாடு என்பதுதான் காரணம். இந்தச் சட்டத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...