புதன், நவம்பர் 19, 2003

கணக்குப்புலி கந்தசாமி மகன்


'சாமி, ஏதாச்சும் வேலை இருந்தாக் கொடுங்க, சீவனத்துக்கே வழியில்லைங்க '

'ஓ, கந்தசாமி மகனா, என்ன வேலைடா செய்வே?'

'கணக்கெல்லாம் நல்லாப் போடுவேங்க, கணக்குப்பிள்ளை வேலை கொடுத்திங்கன்னா...'

'போடா போ, நான் பாக்காத கணக்கா.. மாடு மேய்க்கிற வேலைதான் இருக்கு, செய்யறியா?'

'கஞ்சிக்கே வழி இல்லிங்க, எதுனாலும் செஞ்சு தானே ஆகணும், சரிங்க செய்யிறேன்'

'சரி, சரி, விடிகாலைல சீக்கிரமா வந்து மாட்டையெல்லாம் காட்டுக்கு ஓட்டிட்டுப்போ'

****

'பாத்தியாடா எத்தனை மாடு இருக்குன்னு, சாயங்காலம் இத்தனையையும் பத்திரமா என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போகணும்'

'சரிங்க, எத்தனைன்னு எண்ணிக் குடுத்துடுங்க சாமி'

'என்னமோ கணக்கில பெரிய புலின்னெயே, இப்ப மாட்டை எண்ணரதுக்கு நான் வேணுமா?'

'இல்லிங்க உங்க மாடு, நீங்க எண்ணினா சரியா இருக்கும்'

'இப்படி வரிசையா நிறுத்து, நான் எண்ணிக் காமிக்கறேன்'

'இந்தாங்க, எல்லாம் வரிசையில நிறுத்தியிருக்கனுங்க'

'பாத்தியா, ஒரு வரிசையிலெ நாலு மாடு இருக்கா, அது மாதிரி எத்தனை வரிசை இருக்கு?'

'ஒண்ணு, ரெண்டு...அஞ்சுங்க'

'ம்..ம்..பரவால்லேடா, உனக்கும் எண்ணிக்கையெல்லாம் தெரியுதே'

'நான் மொதல்லியே சொன்னேனுங்க...'

'சரி சரி, நீ கில்லாடின்னு தெரியும், எத்தனைன்னு பாத்துட்டயல்ல, இதே மாதிரி எனக்கு பொளுதோட திரும்ப எண்ணி ஒப்படைக்கணும், தெரிஞ்சுதா'

'சரிங்க, வரிசைக்கு நாலா, அஞ்சு வரிசை ஒப்படைக்கணும், இல்லிங்களா?'

'உனக்கு எத்தனை தாட்டி சொல்றது, அதேதான், வரிசைக்கு நாலா, அஞ்சு வரிசை ஒப்படைக்கணும். ஏதோ கந்தசாமி மகன்ங்கிறதுனால உன்னை நம்பி ஒப்படைக்கிறேன், மாட்டிலே ஒண்ணு கொறஞ்சாலும், படவா பஞ்சாயத்தில நிறுத்திடுவேன்'

'சரிங்க சாமி'

******

'சாமி, மாடுங்க அல்லாம் நல்லா மேஞ்சுதுங்க, இதோ எல்லாத்தையும் கொண்டுவந்துட்டேங்க'

'ஓஹோ, சரி சரி, நான் எண்ணிப்பாக்க வேண்டாமா, அல்லாத்தையும் வரிசையில நிறுத்து'

'நிறுத்திட்டேங்க சாமி, சரியான்னு பாத்துக்கங்க'

'எங்கே காமி'

'இத பாருங்க, வரிசை ஒண்ணு, ரெண்டு,..அஞ்சு'

'டேய், என்னடா நிறைய மாடு கொறையுது'

'இல்லிங்களே, நீங்க சொன்ன மாதிரி நாலு நாலா அஞ்சு வரிசை இருக்குங்களே'

'அடே, அடே நீ கணக்கிலெ கில்லாடின்னு நான் ஒத்துக்கறேன், இப்ப என் மாட்டையெல்லாம் கொடுத்துடுடா'

'சாமி, நீங்க சொன்ன மாதிரி நாந்தான் அஞ்சு வரிசை காட்டிட்டனுங்களே'

'அடே, அதெல்லாம் வேண்டாண்டா, என்னுது இருவது மாடுடா, என்னடா நிறைய மாட்டைக் காணோமே'

'சாமி, நான் சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன், வாங்க நீங்க சொன்ன மாதிரி பஞ்சாயத்துக்கு, அவங்களையே கேட்டுருவோம்'

****

கணக்குப்புலி, கந்தசாமி மகன் எத்தனை மாடுகளைக் கொண்டுவந்து
சரியாய் இருக்கிறது என்று சாதித்தான்? எப்படி நிறுத்தி பண்ணையார் வாயை அடைத்தான்? யாருக்கு என்ன தோணுகிறது? எனக்கு எழுதலாம். என்னிக்காவது இந்தப் பொட்டி தட்டுற வேலையெல்லாம் இல்லாமப் போனா, நமக்கெல்லாம் ஆகும். ம்..யாருக்கு என்ன வேலை கொடுக்கணுமோ அதைத்தான் கொடுக்கணும்னு பண்ணையார் புரிஞ்சிருப்பார்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...