சனி, நவம்பர் 15, 2003

பாரதியின் தீர்க்கதரிசனம்

திசைகள் இதழில் ஒவ்வொரு மாதமும் பாரதியார் பக்கம் என்ற தலைப்பிட்டு மகாகவியின் கருத்துக்கள் எண்ணங்கள் அதிலும் அதிகம் (நான்) கேள்விப்படாத விஷயங்கள் வெளியாகின்றன. இந்த நவம்பர் இதழில் வெளியானதிலிருந்து சில வரிகள்:


வெளிநாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள். புறப்படுங்கள். புறப்படுங்கள். தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித்வான்களே, புத்திமான்களே, எப்படியேனும் யாத்திரைச் செலவுக்குப் பணம் தயார் செய்து கொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்து விட்டு வாருங்கள். நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் யோசனைகளுக்கும் வெளி நாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்பட வேண்டாம்.

...எவ்விதமான யோசனை, எவ்விதமான தொழில், எவ்விதமான ஆசை, எதையும் கொண்டு பிற தேசங்களுக்குப் போக வேண்டும். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவியமில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம். வெளியுலகம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வரவுக்குக் காத்திருக்கிறது. நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது. வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றாலொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே, வெளி நாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும், மனவுறுதியினாலும் பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வத்துடனும், வீர்யத்துடனும், ஒளியுடனும் திரும்பி வாருங்கள்.

உங்களுக்கு மஹா சக்தி துணை செய்க.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...