புதன், நவம்பர் 19, 2003

விடுகதையும் விடைக்கதையும்

புதிர் ஒன்றை சோடனை செய்து கதை வடிவத்தில் (விடு'கதை' என்பது இது தானோ?) கொடுத்திருந்தேன். சில விடைகள் மின்னஞ்சலில் வந்திருந்தன. அதில் முக்கியமான ஒரு பதில் மனதைக் கவர்ந்தது.

முதலில் நான் இதை வெறும் புதிராகத்தான் பதிக்க எண்ணி, ஒரு பாரா தட்டச்சியும் விட்டேன். பிறகு என்ன இது ரொம்ப வறட்சியாக இருக்கிறதே. எப்படியாவது சுவையூட்ட முடியுமா என்று யோசித்து இப்படி ஒரு முயற்சி செய்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது, இப்போது படிப்பதற்கு எளிய நடையாகத் தோன்றியது. சரியென்று பதித்தேன்.

நண்பர் கண்ணன் பார்த்தசாரதி இதற்கு வெறும் விடையாகக் கொடுக்காமல் விடுகதைக்கு பதிலாக ஒரு விடைக்கதை ஒன்றை தன் வலைமொட்டுக்களில் பதித்து இருக்கிறார். அதைப் படிக்கும்போது வெறும் புதிருக்கு விடை என்பதைவிட எவ்வளவு மனித உணர்வுகளைப் பின்னி எழுத முடியும் என்பது புரிந்தது. இந்தப் பாடத்திற்கு நன்றி, கண்ணன்.

அருமையான அந்த விடைக்கதையை இங்கே காணலாம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...