வியாழன், ஜனவரி 15, 2004

வலைப்பூ - சில சிந்தனைகள்

கடந்த சில நாட்களாக என் வலைப்பதிவில் வாழ்க்கைக்கதை மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இதை குழாய்த்தண்ணீரைப்போல விட்டுவிட்டு எழுத விருப்பம் இல்லை. இரண்டு, எனக்கு நியூக்ளியஸ் மென்கலம் சம்பந்தமான சோதனைகளுக்கு நிறைய நேரம் செலவிடவேண்டி இருக்கிறது.

இருந்தாலும், நம் தமிழ் வலைப்பதிவுகள் சஞ்சிகையான வலைப்பூ பற்றி எனக்கு சில கருத்துகள் தோன்றியது, அதை இங்கு பதிக்கலாம் என்று எண்ணம்.

இதன் முக்கிய நோக்கமாக நான் கருதுவது:எல்லாராலும் 100 வலைப்பதிவுகளுக்கும் போய்ப் படிக்க முடியாதாகையால், இந்த வலைப்பூ ஆசிரியர்கள் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடி, அந்த வாரம் பதிவான விஷயங்களில் குறிப்பிடத்தகுந்ததை எடுத்துக் காட்டலாம். கூடவே அந்த வார ஆசிரியரைப்பற்றி, அவர் ரசித்த மற்ற விஷயங்களைப்பற்றியும் கோடி காட்டலாம். இதுகூட, தனியே வலைப்பதிவு செய்யாத ஆசிரியருக்கே பொருத்தமாக இருக்கும்.

முதலில் வந்த ஆசிரியர்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் செய்தார்கள். ஆனால் கடந்த சில வாரங்களில் இந்த பாணி மாறிக்கொண்டே வருவதாக ஒரு தோற்றம். இன்னொன்றும் சொல்லலாம், கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒருவர் வலைப்பதிவு செய்யும் அளவுக்கு விஷயங்களை இந்த ஒரு வாரத்தில் தந்து அஜீர்ணம் ஆக வைத்துவிடுவதுபோலவும் தோன்றுகிறது.

இதில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாருக்கும் பிடித்திருந்தால் இப்படியே தொடர்வதில் தப்பில்லை.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...