திங்கள், பிப்ரவரி 02, 2004

ஜனவரியில் ரெகார்ட் பனிப்பொழிவு

எங்க ஊர் ரோச்சஸ்டரில் இந்த ஜனவரியில் 61 அங்குலம் (5 அடி) பனிப்பொழிவு ஆனது. இது இந்த 120 வருடமாக பதிவானதிலேயே மிக அதிகம். நாங்கள் இங்கு வந்த முதல் வருடம் மிக மிகக் குறைவான பனிப்பொழிவு. சென்ற குளிர்காலம் முழுமைக்கும் பார்த்தால் பனிப்பொழிவு மிக அதிகம் என்றாலும் ஒரே மாதத்தில் இவ்வளவு இல்லை. இதுவும் ஒரு புது அனுபவம்தான்.

இந்த ஒரு மாதமாக தேவையில்லாமல் எங்கும் வெளியே போவதில்லை. மனைவியை அதிகம் கார் ஓட்டவிடுவதில்லை. எனக்குத் தெரிந்த இருவர் 180டிகிரி எபவுட் டர்ன் அடித்திருக்கிறார்கள், நல்ல வேளையாக அந்த நேரம் வேறு வண்டிகள் சாலையில் வராததால் பிரச்னை இல்லாமல் தப்பித்தார்கள். வேறு ஒருவர் சாலையின் ஓரத்தில் இருக்கும் தடுப்பில் மோதி $1000 செலவு செய்தார். குழந்தைகளும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். சில சமயம் எதற்கு இந்த சிறை வாழ்க்கை என்று வெறுப்பாய் இருக்கிறது. அமெரிக்காவிலேயே டெக்சாஸ் போன்ற இடங்களில் வாய்ப்புக் கிடைத்திருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று ஆதங்கமாயும் இருக்கும். ம்..வாழ்க்கையில் எதுவுமே சமரசம் தான், ஒன்றைப் பெற ஒன்றை இழந்தாகவேண்டும்.


பனிக்காலக் காட்சிகளில் சிலவற்றை இங்கு பதிக்கிறேன். (பெரிதாய்ப் பார்க்க சொடுக்கவும்)


Icicles from roof
ஐசிக்கிள்ஸ் (Icicles) என்பது வெள்ளைப் பனி உருகி வடிய ஆரம்பித்து ஆனால் கீழே முழுதும் விழுவதற்குள் மீண்டும் உறைந்து குச்சிகுச்சியாய் ஆலம்விழுதுகள் போல் தொங்கும் பனிக்கட்டி ஈட்டிகள். இம்முறை கூரையிலிருந்து தொங்கும் சில ஐசிக்கிள்ஸ் பதுப் பதினைந்து அடி நீளம் வரை வளர்ந்து, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இங்கே அப்படிப்பட்ட ஐசிக்கிள்ஸ் சில.


Icicles from roof
Icicles from roof
சில சமயம் காற்று அடிக்காமல், வெயில் வெளியே தெரியும்போது கொஞ்ச நேரம் குளிர்கால உடுப்புகள் இல்லாமலேயே வெளியில் நிற்கமுடியும். அப்படிப்பட்ட நேரத்தில் எடுத்த படங்கள்.


Icicles from roof

Icicles from roof
பனிப்பொழிவு இல்லாத நேரத்தில் காரின் முன்னிருக்கையில் இருந்து ஒரு நெடுஞ்சாலைத் தோற்றம். வலப்புறம் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங் லாட்டில் சில கார்கள். (மேலே கிடக்கும் பனியைச் சுத்தம் செய்தபின் வெளியே போய் வந்த கார்கள் இந்த லட்சணம்!)

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...