சனி, பிப்ரவரி 14, 2004

புது வீடு போயாச்சு

ரெண்டு வாடகை (ஓசி ஹி..ஹி..) வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மாதமாய் குடியிருந்துவிட்டு சொந்தமாக மனை வாங்கி, அஸ்திவாரம் தோண்டி, சுவர் எழுப்பி, வீடு கட்டி, பூச்சு, வர்ணம் எல்லாம் செய்து, என் புதுமனை புகுகிறேன். எல்லாரும் அங்கு வந்து வாழ்த்தி, எப்போதும் போல் அடிக்கடி திண்ணைப்பக்கம் வந்து அரட்டைக் கச்சேரியில் பங்கெடுத்து, என்னை மகிழ்வியுங்கள். (மு. உஷாவுக்காக, விசேஷமாய் முட்டிக்கிற மண்டையெல்லாம் வெச்சிருக்கேன்)

இந்த வீடு கட்டிய அனுபவத்தையும் எழுதணும்.

அன்புடன்,
-கொத்தனார் காசி.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...